வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வரவேற்போம் தன்னம்பிக்கை சிங்கம் யுவராஜ்சிங்கை


வரவேற்போம் தன்னம்பிக்கை சிங்கம் யுவராஜ்சிங்கை

யுவராஜ்சிங் 2011 உலககோப்பையின் தொடர்நாயகன்.ஆல்ரவுன்டர் பல சூழ்ச்சிகளிலும் தனது திறமையால் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்றவர்.2011 ம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான டெஸட் போட்டிக்கு பிறகு அவர் எப்போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை காரணம் புற்றுநோய்.

சிகிச்சையின் பொழுது



சிகிச்சைக்கு பிறகு பயிற்சியின் பொழுது



புற்றுநோயால் மிக கொடியமுறையில் பாதிக்கப்பட்டு அவரது தன்னம்பிக்கையாலும் ,கடவுளின் அருளாலும், ரசிகர்களின் பிரார்த்தனையாலும் புற்றுநோயை வென்று மே மாதம் இந்தியா திரும்பினார்.புற்றுநோயின் பாதிப்பை எண்ணி வருத்தப்படாமல் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.


6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அற்புத காட்சி



இன்று அறிவிக்கப்பட்ட 20 ஓவர் உலககோப்பைக்கான  இந்தியா அணியில் யுவராஜ்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது அவரது தன்னம்பிக்கைக்கு கிடைத்த மாபெரும் பரிசு.நம் சகோதரனை மனமார வரவேற்போம், மாபெரும் சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக