உலகநாயகன் கமல்-சில அவலங்கள்
கமல் சிறந்த நடிகர் என்பதை யாரும் மறுக்கவில்லை.நானும் அவரது நடிப்பை என்றும் ரசிக்கின்றேன்.அனைத்து நடிகர்களும் பணம்,புகழ் சம்பாதிக்க தான் நடிக்க வருகின்றனர்.ஆனால் ஒரு சில நடிகர்களிடம் தான் மனிதாபிமானம் உள்ளது.அது கமலிடம் உள்ளதா என்றால் எனக்கு தெரிந்தவரை கிடையாது என்பேன்.
கமல் பிராமின் பிரிவை சேர்ந்தவர்.அவர் திரை உலகில் வளரும் காலங்களில் திராவிட கட்சிகள் ஆதிக்காமாக இருந்ததாலும் பிராமின் பிரிவு என்றால் எங்கே நம்மால் மேலே செல்ல முடியாதோ(எ.கா மெஜினிகணேசன்)என்ற காரணத்தினால் தான் இன்று வரை கடவுள் எதிர்ப்பு கொள்கை உள்ளவராக தன்னை வெளிஉலகிற்கு காட்டிக்கொண்டுள்ளார்.
2 மனைவிகள் இருவரையும் விட்டு பிரிந்து உள்ளார்.கௌதமியுடன் வாழ்ந்து வருகிறார்.கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல்;.இதை நிருபர்கள் கேட்டதற்கு என் வீட்டிற்குள் எட்டி பார்க்காதீர்கள் என்று வெளிப்படையாக சொன்னவர்.
வாணியுடன் கமல்
சரிகாவுடன் கமல்:
கௌதமியுடன் கமல்:
தான் பெரிய நடிகர் ஆகும் வரை ரசிகர் மன்றங்களை ஆதரித்தவர் அதன் பிறகு ரசிகர் மன்றங்கள் எனக்கு வேண்டாம் என்றும் விருப்பம் இருந்தால் அவற்றை நற்பணி மன்றம் ஆக்கிவிடும் படி அறிவத்தவர்.இவ் அறிவிப்பை அவரது ஆரம்ப காலத்தில் அறிவிக்காதது ஏன்?
பட்ஜெட் குறைவான திரைப்படங்கள் அல்லது நல்ல கதையுள்ள படங்கள் என்றால் அவரது சொந்த தயாரிப்பாகவே வரும்.1995 க்கு பிறகு இவர் நடித்த திரைப்படங்களால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை(வசூல்ராஜா தசாவதாரம் தவிர்த்து).ஆளவந்தான் படத்தை தாணு தயாரித்தார் அவற்றில் ஏற்பட்ட நஷ்டம் பற்றி வெளிப்படையாகவே அறிவித்தார்.கமல் தன்னை உலகம் போற்றும் நடிகராக மாற தான் போராடுகிறாரே தவிர்த்து தன்னை வைத்து படம் பண்னும் தயாரிப்பாளருக்கு லாபம் தர வேண்டும் என்பது அவரது எண்ணம் இல்லை.
கமலை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மீண்டும் அவரை வைத்து படம் எடுக்க தயங்குகின்றனர்.தான் பெரிய மேதை என்று வெளி உலகிற்கு காட்ட மிகவும் போரடுகிறார்.இவரது படங்கள் வெளிவரும் காலங்களில் அனைத்து சினிமா நிகழ்ச்சியிலும் தவறாமல் கலந்து கொள்வார்.படம் வெளிவரும் காலத்தில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு தொகை அளிப்பார்.அரசால் அவரது படத்திற்கு பாதிப்பு வர கூடாது என்று.
கமல் என்றும் ஆளும்கட்சிக்கு மிக செல்ல பிள்ளையாக நடிக்கவே ஆசைப்படுவார்.அதிலும் விருமான்டி படத்திற்கு வந்த எதிர்ப்புக்கு பிறகு ஆளும்கட்சிகளுக்கு ஆட்சியில் உள்ளவரை அனுசரித்து போவதே அவரது கொள்கை.அவரது ராஜ்கமல் பேனரில் வந்த திரைப்படங்கள் அனைத்தும் ஆளும்கட்சி தொலைக்காட்சிக்கு மட்டுமே தருவார்.கலைஞர் ஜெயா டிவிக்கு படங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
தமிழக மக்கள் இல்லை என்றால் கமலால் இவ்வளவு பணத்தையும் புகழையும் சம்பாதித்து இருக்க முடியுமா?.தமிழக மக்களுக்கு வேண்டாம் ஏழைகளுக்கு ஏதேனும் சிறு உதவியாவது இவர் செய்தது உண்டா?.அனைத்து நடிகர்களும் இப்படி தான்.
பின்குறிப்பு:கமலின் நடிப்பை நான் குறை சொல்லவில்லை அவரது குணங்களை தான் நான் கூறியுள்ளேன்
பின்குறிப்பு:கமலின் நடிப்பை நான் குறை சொல்லவில்லை அவரது குணங்களை தான் நான் கூறியுள்ளேன்
Good review... Ingeyum varungal..
பதிலளிநீக்குhttp://varikudhirai.blogspot.com/2012/08/the-silence-of-lambs.html
அண்ணே பூவை பூன்னும் சொல்லலாம் புய்ப்பம்னும் சொல்லலாம் , நீங்க சொல்ற மாதரியும் சொல்லலாம் ,thats it...
பதிலளிநீக்கு|| பின்குறிப்பு:கமலின் நடிப்பை நான் குறை சொல்லவில்லை அவரது குணங்களை தான் நான் கூறியுள்ளேன் ||
பதிலளிநீக்குநீங்களும் அவரை நடிகராக மட்டும் பாருங்கள்;அவரது தனிப்பட்ட வாழ்க்கையை ஏன் பார்க்கிறீர்கள்? :)
உங்களை ஆளும் அரசியல்வாதி தனிப்பட்ட வகையில் நேர்மையாக இருக்க வேண்டும்,ஆனால் அதை எவரும் கருதிப் பார்ப்பதில்லை..ஆனால் நடிகர்களின் திரைக்குப் பின்னால் வாழ்வைத் துருவிப் பார்க்கிறோம்.
முரண்பாடு யாரிடம் இருக்கிறது?
ஆரம்பத்திலும் கமல் தனக்கு ரசிகர் மன்றம் வேண்டாம் என்றிருந்தவர் தான். ஆனால் ரசிகர்கள் அவரின் அனுமதி இல்லாமலே தொடங்கினார்கள், அவற்றை நெறிபடுத்தவே ரசிகர்களுக்கு மன்றம் தொடங்க அனுமதிக்கப்பட்டது. பின்பு, அவற்றை உலகில் முதல் நடிகராக நற்பணி இயக்கங்களாக மாற்றி இன்றும் அரசியல் நோக்கில்லாமல் செயலாற்றி வருகிறார்.
பதிலளிநீக்கு//தமிழக மக்கள் இல்லை என்றால் கமலால் இவ்வளவு பணத்தையும் புகழையும் சம்பாதித்து இருக்க முடியுமா?.//
தனக்கு ஹாலிவுட் வாய்ப்பு வந்த போது கூட, தமிழ் ரசிகர்களால் தான் தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கூட கூறினார்..
//கமல் என்றும் ஆளும்கட்சிக்கு மிக செல்ல பிள்ளையாக நடிக்கவே ஆசைப்படுவார்//
கடந்த தேர்தலில் ஜெ தான் ஆட்சிக்கு வரபோகிறார் என்று தெரிந்தவுடன், மீடியா முன்னிலையில் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டவர் அல்ல கமல்....
ஜெ ஆட்சி நடக்கும் போது, மு.க வுடன் இணைந்து வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் என்ற புத்தகத்தை வெளியிட்டவர் தான் கமல்.
http://kulambiyagam.blogspot.in/2011/01/blog-post_29.html
பதிலளிநீக்குகமல் தன்னை உலகம் போற்றும் நடிகராக மாற தான் போராடுகிறாரே தவிர்த்து தன்னை வைத்து படம் பண்னும் தயாரிப்பாளருக்கு லாபம் தர வேண்டும் என்பது அவரது எண்ணம் இல்லை.
பதிலளிநீக்குIf this is true, then how Kamal is getting new films produced by other producers..
One question, when he got problem for Virumandi and Mumbai xpress, where you have gone.. Why you did not give any support to him..
Selling his films to jaya tv or kalaignar is his business. he is investing money.
so dont try to get the hits by writing something, there are some other business, you will get more "hits"
thangaludaiya karuththukkal enakku udanpaadu illai nadigar enbar nammaipol oru iyalbaana manidhargal avargal ondrum magaangalum alla evaridamum edhirppaarppu migudhiyaanadhaal vandha kolaaru
பதிலளிநீக்குpadhivittamaikku nandri
surendran
thangaludaiya karuththukkal enakku udanpaadu illai nadigar enbar nammaipol oru iyalbaana manidhargal avargal ondrum magaangalum alla evaridamum edhirppaarppu migudhiyaanadhaal vandha kolaaru
பதிலளிநீக்குpadhivittamaikku nandri
surendran
ஒரு விஷயம் கூட ஏற்று கொள்ளும்படி இல்லை.உங்களுக்கு கமல் பிடிக்கவில்லை.அவ்வளவு தான்.
பதிலளிநீக்குகமல் போன்ற ஒருவர் தமிழ் சினிமாவில் இருப்பது நமது பாக்கியம்.