வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஆன்ட்ராய்ட் கோல்மால் ஆபத்து


ஆன்ட்ராய்ட் கோல்மால் ஆபத்து

எதுக்கு எதுக்கு எல்லாம் சாப்ட்வேர் கண்டுபிடிக்கனும்னு இவங்களுக்கு விவஸ்தையே இல்லை.இப்ப மிகவும் பிரபலமாயிக்கிட்டு இருக்க ஆன்ட்ராய்ட் மொபைல வந்து இருக்குற இந்த புது வசதி எத்தனை பேருக்கு இதுவரை பிரச்சினை குடுத்து இருக்கு இன்னும் எத்தனை பேருக்கு தரபோகுதோ.விளையாட்டுத்தனமான இந்த சாப்ட்வேர் எவ்வளவு வினையை ஏற்படுத்தி இருக்குனு நக்கீரன் பத்திரிக்கைல வந்து இருக்ற   இந்த செய்தியை படித்து பாருங்கள்.
அந்த சாப்ட்வேரின் பெயர்:
call faker spoofer fone phreak
இதன் வசதி என்னவெனில் நாம் நண்பருக்கு அழைப்பு செய்யும் பொழுது அவரது மனைவி அல்லது வேறு நபரின் எண் தெரிந்து நாம் டயல் செய்யும் பொழுது அவ் எண்ணை நமது மொபைலில் இருக்கும் சாப்ட்வேர் மூலம் டயல் செய்தால்  அவரது மொபைலுக்கு நமது எண் செல்லாமல் நம் சாப்ட்வேர் மூலம் (மனைவி அல்லது வேறுநபர்) டயல் செய்த எண் செல்லும்.இதனால் மாபெரும் குழப்பங்களை ஏற்படுத்த முடியும்.விஞ்ஞான வளர்ச்சி மனித இனத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும் போல.



புதன், 29 ஆகஸ்ட், 2012

எங்கே போகனும் குறும்படம்


எங்கே போகனும் குறும்படம்
சாப்ட்வேர் இன்ஜினியர்களின் நிலையையும் சேர்ஆட்டோ ஓட்டுனர்களின் நடவடிக்கையை பற்றியும் நகைச்சுவையாகவும் நேர்த்தியாகவும் தந்துள்ளனர்.நல்ல ரசிக்க கூடிய குறும்படம்அனைவரும் நன்றாக நடித்துள்ளனர்.பாருங்கள்.










செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு-குறும்படம்

காதல்.நட்பு பற்றி இந்த கால இளைஞர்களின் நிலையை நகைச்சுவையாக கூறியுள்ளனர்.நீங்களே பாருங்கள் நகைச்சுவையான குறும்படம்.2 மணி நேரம் மேல் பார்க்கும் திரைப்படங்கள் தராத திருப்பியை 10 நிமிடங்கள் வரும் குறும் படங்கள் அளித்துவிடுகின்றன.வரவேற்போம் நல்ல குறும்படங்களை.




திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பேஸ்புக்குக்கு வந்த ரசிக்க் கூடிய படச்செய்திகள்


பேஸ்புக்குக்கு வந்த ரசிக்க் கூடிய படச்செய்திகள்

பேஸ்புக்ல தான் எவ்வளவு சீரியஸான விசயத்தையும் ரசிக்ற மாதிரி சொல்றாங்க நம்ம நண்பர்கள்.நான் ரசித்த சில படச்செய்திகளை இந்த பதிவுல தந்கு இருக்கேன்.உங்களுக்கும் பிடிக்கும்னு நினைக்றேன்





















கேவலமான (ஆபாசமான) விளம்பரங்கள்...தேவைதானா?


கேவலமான (ஆபாசமான) விளம்பரங்கள்...தேவைதானா?

விளம்பரம் எடுக்குறோம்னு இவ்வளவு கேவலமா எல்லாம் யோசிக்ககூடாது.இவங்க பாடிஸ்பிரே உபயோகிச்ச ஊர்ல இருக்ற பெண்கள் எல்லாம் பின்னுக்க வருவாங்களாம்.எவ்வளவு கீழ்த்தரமான விளம்பரங்கள்.இந்த விளம்பரங்கள் எல்லா தொலைக்காட்சிகளிலும் வருது இதை எப்படி குடும்பத்தோட பார்க்க முடியும் இதை விட கொடுமை சுட்டி டிவியில கூட விளம்பரம் வருது சின்ன குழந்தைகளுக்கு இதை பத்தி என்ன தெரியும்.இப்பவே பசங்க மனசை திசைதிருப்புற இந்த மாதிரி விளம்பரங்களை தடுக்க அரசாங்கம் யோசிக்காலமே.இவை அனைத்தும் சென்சார் செய்யப்பட்டவையாம்.


நீங்களே பாருங்க வீடியோவை:













திங்கள், 20 ஆகஸ்ட், 2012

ரம்ஜான்-இந்துவாகிய நான்

ரம்ஜான்-இந்துவாகிய நான்

இன்று ரமலான் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அருமை மாமாக்களுக்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள்.எங்களது ஊரில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மாமன் முறை வைத்து தான் அழைத்துக் கொள்வோம்.அதனால் தான் அருமை மாமாக்கள் என்று கூறினேன்.

இன்று அரசியல் கட்சிகளும் சில மதத்தலைவர்களும் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பிரிவினை சண்டை ஏற்படுத்தி அவர்கள் லாபம் அடைய நினைக்கின்றனர்.ஆனால் அவர்களது முயற்சிகள் பெரிய அளவில் எதுவும் வெற்றி அடையவில்லை.நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம்.

ரமலான் நோன்பு கடைபிடிக்க ஆரம்பித்த முதல் நாள் முதல் தீவிர இந்துவாகிய நான் தினமும் நோன்பு கஞ்சி சாப்பிட்டுக்கொண்டு தான் உள்ளேன்.தினமும் மாலை நேரங்களில் எங்களது இல்லம் தேடி வந்து இஸ்லாமிய நண்பர்கள் நாள் தவறாமல் கஞ்சி அளித்தனர்.சைவத்தை கடைபிடிகத்தால் எங்களுக்காக தனியாக கஞ்சி தயாரித்தும் தந்தனர்.நாங்களும் தீபாவளி மற்றும் முக்கிய பண்டிகைகளில் பொங்கல் சுவிட் அனைத்தும் பரிமாறிக்கொண்டு அன்பை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இந்து குழந்தைக்கு உடம்புக்கு முடியவில்லை எனில் மசூதிக்கு சென்று மந்திரிப்பதும், இஸ்லாமிய குழந்தைக்கு முடியவில்லை எனில் இந்து கோவில்களில் மந்திரிப்பதும் தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்றுக் கொண்டு தான் வருகிறது.இரு சமுதாய மக்களும் அனைத்து விசயங்களிலும் ஒற்றுமையாக தான் உள்ளனர்.

உலகிலேயே இந்தியாவில் தான் மதங்களும் ஜாதிகளும் அதிகம்.இங்கே அனைத்து மத மக்களும் சமத்துவத்துடன் வாழ்கின்றனர்.அனைவருக்கும் சமமான உரிமை உள்ளது.சொல்லபோனால் இந்துவை காட்டிலும் மற்ற மதங்களுக்கு தான் இங்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.இன்று பாகிஸ்தானில் இந்து மதம் முற்றிலும் அளிய கூடிய சூழ்நிலையில் தான் உள்ளது.ஆனால் இந்தியாவில் என்றும் அனைத்து மதமும் சமமாக தான் மதிக்கப்படுகிறது.தீவிரவாதத்தை ஊன்றி வளர்த்த பாகிஸ்தான் இன்று தீவிரவாதத்தாலயே அளிந்து கொண்டு வருகிறது.பணம் ஆசை காட்டி இளைஞர்களை தீவரவாதம் பக்கம் இழுத்தாலும் இந்தியாவை யாரலும் அழிக்க முடியாது.

வேலை இல்லாமல் சும்மா இருப்பவர்களும் மக்களின் ஒற்றுமையை பொறுக்காத சிலர்கள் ஆங்காங்கே வன்முறையை தூண்டினாலும் பெரும்பான்மையான மக்கள் அவற்றை என்றும் நம்புவது கிடையாது அவர்கள் தங்களது அமைதியான வாழ்க்கையை தான் விரும்புகின்றனர்.சபரிமலைக்கு 48 நாட்கள் விரதம் இருந்து செல்லும் பொமுது கூட நாங்கள் முதலில் செல்வது வாபரின் கோவிலுக்கு தான்.நபிகள் நாயகமும் விஷ்னுவும் கடமையை செய்யத்தான் சொல்லி உள்ளனர்.யாருக்கும் நம்மால் தீங்கு செய்யாத பொழுது தான் நம்மால் உண்மையிலேயே இறைவனை காணமுடியும்.மதம் என்ற போர்வையால் இந்தியாவில் கலவரத்தை யார் தீண்டினாலும் என்றும் வெற்றி காண முடியாது.நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகளே.எங்களது சொந்தங்களை தீவிரவாதம் மூலம் எங்களிடம் இருந்து பிரிக்காதீர்கள்.

மீண்டும் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்




ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் 2010 வரை நடந்த ஊழல் தொகை 910603234300000


இந்தியாவில் 2010 வரை நடந்த ஊழல் தொகை 910603234300000

சமிபத்தில் மத்திய தணிக்கை ஆணையம் சென்ற ஆண்டிற்கான ஆய்வறிக்கையை சமர்பித்தது.நிலக்கரிச் சுரங்களை தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கயதில் 1,80,000  கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்துள்ளது.டெல்லி விமான நிலையத்தை தனியார்க்கு விட்டதின் மூலம் 25000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலே நாட்டை பெரிய அதிர்ச்சி உள்ளாக்கியது தற்சமயம் இவ் ஊழலும் சேர்ந்து அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

இணையத்தில் இவற்றை பற்றி தேடும் பொழுது கிடைத்த சில தகவல்களை இப்பதிவு முலம் பகிர்ந்து கொள்கிறேன்.போஸ்டர் இமேஜ் ஒன்று கிடைத்தது.சில ஊழல்களைப் பற்றி அவற்றில் அளித்துள்ளனர்.அதே போல் ஓரு வீடியோ காட்சியும் உள்ளது இவற்றை பாருங்கள்.இவற்றில் கொடுக்கப்பட்ட தகவல்கள் அதிகமாக மத்திய அரசை சார்ந்த ஊழல்களும் ,கண்டுபிடிக்கப்பட்ட ஊழல்கள் மட்டுமே.நமது கலைஞர் போல் விஞ்ஞான முறையில் செய்த ஊழல்களை எல்லாம் தொகுத்தால் நமக்கு நெஞ்சுவலியே வந்துரும்.ஊழல்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும் ஊழல்செய்பவர்களை தண்டிக்க கடுமையான சட்டம் நம் இந்தியாவில் இல்லை என்பது மிகவும் வருந்தக்கூடிய செய்தி.சட்டங்கள் கடுமையானல்தான் தவறு செய்பவர்கள் திருந்துவார்கள்.என்று கடுமையான சட்டம் வரும்.



முத்தான பாடல்கள்-கேட்டுக் கிட்டே இருப்பேங்க


முத்தான பாடல்கள்-கேட்டுக் கிட்டே இருப்பேங்க

இளையராஜாவின் இந்த பாடல்களை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கத்தான் தோனும்.இன்று காதுகுத்து விழாவுக்கு சென்ற பொழுது அங்கே கேட்ட இனிய பாடல்களை ஒரு பதிவாக போடலாம்னு நினைச்சேன் அது தான் இந்த பதிவு.இதைக் காட்டிலும் நல்ல பாடல்கள் நிறைய உள்ளன அவற்றில் ஒரு சில தான் இங்கே தந்துள்ளேன்.பாடலைக் கேட்ட பொழுது மனம் சொல்ல முடியாத ஒரு உணர்வில் இருந்தது நீங்களும் கேட்டு பாருங்களேன்.

ராமராஜன்-இளையராஜா கூட்டணியில் வந்த மனதை மயக்கும் பாடல்கள்


படம் பெயர்:செண்பகமே செண்பகமே :பாடியவர்கள்:SPB,ஜானகி
படம் பெயர்:எங்க ஊரு காவல்காரன்: பாடியவர்கள்:தியாகராஜன், சுசிலா
படம் பெயர்:எங்க ஊரு பாட்டுக்காரன்: பாடியவர்கள்:மனோ சித்ரா
படம் பெயர்:எங்க ஊரு பாட்டுக்காரன்: பாடியவர்:ஆஸாபோன்ஸ்லே
படம் பெயர்:ராசாவே உன்னை நம்பி: பாடியவர்கள்:சுசிலா மனோ
படம் பெயர்:பொங்கி வரும் காவேரி: பாடியவர்கள்:அருண்மொழி,சித்ரா
படம் பெயர்:கராகட்டக்காரன்: பாடியவர்கள்:இளையராஜா சித்ரா

சனி, 18 ஆகஸ்ட், 2012

கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா?


கருணாநிதியின் பேஸ்புக்-இவ்வளவு கேவலம் தேவை தானா?

தமிழனத்தலைவர் என்று கூறி கொள்ளும் கலைஞர் கருணாநிதி அவர்கள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் சேர்ந்து உள்ளார்.அவர் இது வரை தமிழுக்கு தமிழக மக்களுக்கோ எதுவும் செய்ததும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான் அதைப் பற்றியும் அவரது குடும்ப அரசியலைப் பத்தியும் புதுசாக எமுத ஓன்றும் இல்லை. சராசரி தமிழனால் இன்று வடமாநிலங்களில் சென்று தொழில்செய்யவோ, சுற்றுலா செல்லவோ முடியாதற்கு காரணம் கலைஞர் தான்.காரணம் இந்தியை பேசமுடியாதது தான்.இவர்கள் இந்தி எதிர்ப்பு செய்து கட்சியையும் ஆட்சியையும் பிடித்தார்கள் .பொதுமக்களுக்கு என்ன கிடைத்தது.அவரது பேரன் மத்திய மந்திரி ஆனதற்கு கலைஞர் சொன்ன காரணம் தயாநிதி இந்தி நல்லா பேசுவான் என்றது தான்.ஊருக்கு தான் உபதேசம் போல.

அவரது குடும்ப வரைபடம்.தலைசுத்தும் ஜாக்கிரதை

கருணாநிதி பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வந்து இருக்கிறார்.அவர் என்றும் படித்த மக்களை ஏமாற்ற முடியாது.அரசாங்க ஊழியர்களும் அப்பாவி மக்கள் வேணடும் என்றால் கலைஞரை நம்புவார்கள்.இந்த 89 வயதிலும் பதவி வெறி பிடித்து அழைகின்றார் மகன்களில் யாருக்கு பட்டாபிஷேகம் செய்து வைப்பது என்பதில் முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறார் ஏதோ அவரது அப்பன் சொத்து என்பதை போல.வியாழக்கிழமை பேஸ்புக்கில் இணைந்ததும் அவருக்கு அனைத்து திசைகளிலும் இருந்து மிக மோசமான வார்த்தைகள் கமெண்ட் ஆக விழுந்துள்ளன.பல கருத்துகள் ஓருமையிலும் மிக கீழ்தரமாகவும் இருந்தது.

இவ்வளவு எதிர்ப்பை எதிர்பார்க்காத கருணாநிதி &கோ வியாழன் மாலையில் இருந்து பேஸ்புக் அக்கவுண்டை நிறுத்தியுள்ளனர்.பின்பு சில மாற்றங்கள் செய்து வெள்ளி மாலையில் இருந்து மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்து.இவ்வளவு அவமானம் தேவை தானா.

இது கட்சி போட்டோ இல்ல தலைவர் குடும்பம் தான்:


நண்பர்களே நமக்கு என்று ஒரு தரம் உண்டு கலைஞரை போல கீழ்தரமானவர்களை மோசமாக திடடி நமது தரத்தை ஏன் குறைத்து கொள்ள வேண்டும்.அவரை உண்மையான கேள்விகளை கேட்டாலே பதில் சொல்ல முடியாது அப்புறம் ஏன் அவ்வளவு கீழ் தரமான வார்த்தைகள்.நாய் வாலை என்றும் நிமித்த முடியாது அது போல் தான் கலைஞரின் குணமும் நாம் 1000 சொன்னாலும் அவர் மக்களை எவ்விதத்தில் ஏமாற்றலாம் என்று தான் யோசிப்பார்.

அவரது பேஸ்புக்குக்கு வந்த சில கமெண்ட்களை இங்கு தந்துள்ளேன்.பல கமெண்ட்கள் சென்சார் செய்யப்பட்டுள்ளது அவ்வளவு மோசமான வார்த்தைகள்.நீங்கள் அவரது பேஸ்புக் முகவரிக்கு சென்று நிறைய கேள்விகளை கமெண்டில் கேளுங்கள் நல்ல விதமாக  கெட்ட வார்ததைகளை உபயோகிக்காதீர்கள்.கேள்வி கேட்பதால் கலைஞரை என்றும் திருத்த முடியாது தான் ஆனால் அக்கேள்விகள் மக்களுக்கு சென்றால் அவர்களாது யோசிப்பார்களே.
இது அவரது பேஸ்புக் முகவரி:
http://www.facebook.com/Kalaignar89
இது அவரது டிவிட்டர் முகவரி:
http://twitter.com/kalaignar89

ஈழத்தை அரைநாள் உண்ணா விரதத்தில் பெற்றுத்தந்த தானைய தலைவர்

ராஜீவ் கொலை வழக்குக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கும் . தலைவா உங்களை காங்கிரஸ் கரன் மிஞ்சி உழல் செய்து விட்டன . நீங்கள் எப்படியாவது சுமார் ஒரு இருபது லச்சம் கோடி உழல் செய்து அவர்களது சாதனைய உடையுங்கள் .

நீங்கள் ஒரு அரசியல் அனாதை ...... தேசிய அரசியலில் ஊழல் செய்து நாட்டை அவமானத்திற்கு உள்ளாக்கி இன்று காங்கிரசால் கேவலபடுத்தப்பட்டு அடையாளம் இழந்து கிடக்கிறீர்கள் ..... மாநிலத்திலோ இன்னும் கேவலம் எதிர்கட்சி அந்தஸ்தை கூட இழந்து அனாதை ஆக்கப்பட்டுள்ளீர்கள் ..... ஜெயாவை எதிர்பவர்கள் கூட உங்களோடு இணைய மறுக்கிறார்கள் ..... உங்களுடைய சகாப்தம் முடிந்தது ..... சூரியன் அஸ்தமனமாகிவிட்டது ........ உங்கள் இறுதி நாட்கள் ரணதோடு மனவலியோடு ....

உங்க தலிவரு நாள எழுந்தே நிக்க முடியலையாம இதுல இது வேறைய சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு ப்ப உங்க விளையாட்டு

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

உங்களுக்கு தெரியுமா?கண்டிப்பா தெரிஞ்சுகாங்க.

உங்களுக்கு தெரியுமா?கண்டிப்பா தெரிஞ்சுகாங்க.

நீங்கள் ஏடிம் ல் பணம் எடுக்க போறப்பா உங்களை திருடன் வந்து மிரட்டினா என்ன செய்யனும் இதை பாருங்க.




வாகனத்தின் பதிவு எண் கொண்டு வாகனத்தின் உரிமையாளர் பெயர் மற்றும் அந்த வாகனத்தை பற்றிய அனைத்து தகவல்களும் சில நொடிகளில் தெரிய வேண்டுமா.இதை பாருங்கள்.





ஆட்டோ கட்டணம்-ஏன் இந்த முறைபாடு


ஆட்டோ கட்டணம்-ஏன் இந்த முறைபாடு

சமிபத்தில் கேரளா சென்று இருந்தேன்.அங்கே ஆட்டோ கட்டணத்தை பார்த்தவுடன் என்னால் நம்பவே முடியவில்லை.ஓரு சில இடங்களுக்கு சென்ற பொழுது ஆட்டோ ஒட்டுனர்கள் கேட்ட தொகையை காடடிலும் நான் அதிகமாக தந்தேன் ஏனென்றால் அதே தொலைவு தமிழ்நாட்டில் நான் சென்று இருந்தால் அவர்கள் கேட்ட தொகையை காட்டிலும் குறைந்த பட்சம் 3 மடங்கு அதிகமாக கேட்டு இருப்பார்கள்.
Kerala Auto
 கேரளாவில் நான் சென்ற இடத்தில் எங்கேயும் ஆட்டோவில் மீட்டர் இல்லை ஆனாலும் அவர்கள் கேட்ட தொகை மிகவும் குறைவாகவே இருந்தது.இத்தனைக்கும் கேரளாவில் நம்மை போல் சமதளமான இடங்கள் இல்லை மலைகள் சேர்ந்த பகுதி தான்.மேடுகள் தான் அதிகம்.அப்படி இருந்தும் அவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு குறைவான கட்டணம் வசூலிக்கிறார்கள்.தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள்.
Karanataka Auto
பெங்களுரில் கூட மீட்டர் முறையில் கட்டணம் வசூலிக்கிறார்கள் ஆனால் இரவு 9 மணி முதல் காலை 8 மணிவரை மீட்டர் போட மாட்டார்கள் அவர்கள் கேட்கும் தொகையை தான் தரவேண்டும்.ஆனால் கேரளாவில் இரவு பகல் அனைத்து வேளைகளிலும் ஓரே கட்டணம் தான் வசூலிக்கிறார்கள்.

எங்களது ஊரில் நான் ரெகுலராக போகும் ஆட்டோவில் கூட கட்டணம் அதிகம் தான்.குறைந்த பட்ச கட்டணம் 30 ரூபாய் இங்கே.கேரளாவில் 15 ருபாய்க்கு கூட நான் சென்றேன்.அவர்கள் சொல்லும் கட்டணத்தில் நமக்கு பேரம் பேசவே மனசு வராது அந்த அளவு குறைந்த தொகை.

தமிழ்நாட்டில் பொதுவாக அனைத்து ஊர்களிலும் ஆட்டோ கட்டணங்கள் மிகவும் அதிகமாக தான் உள்ளது.எனக்கு தெரிந்த வரை எந்த ஊரிலும் மீட்டர் கட்டணம் வசூலிப்பதில்லை அவர்கள் சொல்வது தான் கட்டணம்.சென்னையில் ஆட்டோவில் பயணிப்பதை காடடிலும் கால்டாக்சியில்(பாஸ்ட் ட்ராக்)பயணிப்பதில் தான் கட்டணம் குறைவாக உள்ளது.சென்னையில் ஆட்டோ டிரைவர்கள் சொல்வது தான் கட்டணம் அதுவும் வெளியுர் காரர்கள் எனில் கட்டணம் மிகவும் அதிகமாக தான் சொல்கிறார்கள்.தென் மாநிலங்களிலேயே தமிழ்நாட்டில் தான் ஆட்டோ கட்டணம் மிக அதிகம்.அதுவும் மழைக்காலங்களில் இவர்கள் கேட்கும் தொகையை கேட்டால் நெஞ்சுவலியே வந்துரும்.
Tamilnadu Auto
தமிழகஅரசு ஓரு குழு அமைத்து உள்ளதாம் அவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள ஆட்டோ கட்டணங்களை ஒப்பிட்டு தமிழ்நாட்டில் அவற்றை அமுல்படுத்த போகிறார்களாம்.எப்பொழுதுனு மட்டும் கேக்காதீங்க.சீக்கிரமாக நடவடிக்கை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தினால் மிக நன்றாக இருக்கும்.அந்த நாளுக்காக காத்து இருப்போம்.

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

கேன்சரா-இவரைப் பாருங்கள்- பைசா செலவில்லாமல்

கேன்சரா-இவரைப் பாருங்கள்- பைசா செலவில்லாமல்

புற்றுநோயில் (கேன்சர்) பல வகைகள் உள்ளன.அனைத்து தரப்பிலும் இது பரவி வருகிறது.நாம் சாப்பிடும் உணவுகள் முலமாக தற்சமயம் அதிகம் பரவி வருகிறது.கேன்சர்க்கு தற்சமயம் பலமருத்துவ முறைகள் வந்துள்ளன ஆனால் அவற்றிற்கான செலவுகளும் மிக அதிகம்.

எனது நண்பருக்கு கல்லீரல் புற்றுநோய் உருவாகி நன்று வளர்ந்தும் விட்டது.5 வருடங்களாகவே அவருக்கு வயிற்று வலி வந்து கொண்டு இருந்ததாம் அவர் போலிடாக்டரிடம் சென்று ஊசியும் குளுக்கோஸ் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார்.அதன் பிறகு கொஞ்ச நாள் வலி இல்லாமல் இருக்குமாம்.இப்படியே 5 வருடங்களை கழித்துள்ளார் எவ்வித பரிசோதனையும் எடுக்காமல்.1 மாதத்திற்கு முன்பு வலி மிக அதிகமாகி வேற மருத்துவமனை சென்று ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளார் அப்பொழுது தான் அவருக்கு கல்லீரல் புற்றுநோய் என்று தெரியவந்குள்ளது.அம் மருத்துவர் இதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தால் பிழைக்கலாம் இல்லை என்றால் 6 மாதத்திற்குள் இவர் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார்.குறைந்தது 10 லட்சம் செலவாகுமாம் யாரேனும் கல்லீரல் தானம் தந்தால் தான் அறுவைசிகிச்சை செய்யமுடியுமாம்.

நண்பர் ஒரு சில பெரிய மருத்துவமனைக்கும் சென்றுள்ளார் அங்கும் இவ்வாறே கூறியுள்ளனர்.அதன் பிறகு நிறைய இடங்களில் விசாரிக்கும் பொழுது தான் கேரளா மாநிலம் கோட்டயம் அருகில் இருக்கும் இந்த திறமையான மருத்துவரை பற்றி தகவல் கிடைத்தது.அவரிடம் தொலைபேசியில் முன்பதிவு பெற்று அவரை நேரடியாக போய் சந்தித்தோம்.அவர் நண்பரின் மெடிக்கல் ரிப்போர்ட் அனைத்தையும் பார்தது இப்புற்று நோயை முழுவதும் சரிசெய்ய இயலாது என்றும் ஆனால் இதன் பாதிப்பை குறைக்க முடியும் என்று நம்பிக்கை அளித்தார்.எங்களிடம்; அவர் எவ்வித கட்டணமும் வசூலிக்கவில்லை அத்துடன் இலவசமாகவும் மருந்து அளித்தார்.நாங்கள் எவ்வளவு முயன்றும் அவர் கட்டணம் வாங்க மறுத்து விட்டார்.இக்காலத்தில் இப்படிப்பட்ட மருத்துவர்.



டாக்டரை பற்றி:
பெயர்:சி.பி.மேத்யு MBBS,MS,DMR,
அவரது இணையதள முகவரி:http://drmathewscancercure.org/index.php
தொலைபேசி எண்:0481-2320224

சென்னையில் மருத்துவபடிப்பை முடித்தவர்.1969 முதல் கேரளா மருத்துவ கல்லுரிகளில் ரெடியோதெரபி துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றுள்ளார்.கேன்சர் நோய் தீர்ப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவான 
ஆய்வு மேற்கொண்டு 1984 ம் ஆண்டு புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.அலோபதி,ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி அனைத்தும் கலந்து தான் சிகிச்சை அளித்து வருகிறார்.இதுவரை 2500 க்கு மேற்பட்பவர்களை இச்சிகிச்சை முலம் காப்பற்றியுள்ளாரம்.74 வயதிற்கு மேலாகியும் இன்றும் சிறப்பான சிகிச்சை அளித்திக் கொண்டு இருக்கிறார்.உங்களது தெரிந்தவர்கள் யாருக்கேனும் புற்றுநோய் இருந்தால் தயவுசெய்து இவரை பார்க்க சொல்லுங்கள்.உறுதியாக குணமடையும்.என் நண்பருக்கு அவரிடம் சிகிச்சைக்கு சென்று வந்த பிறகு வலி குறைந்குள்ளது.வாழ்த்துவோம் இவரது சேவையை.


2030 ல் இந்தியா எப்படி இருக்கம்-பேஸ்புக்கு வந்த நகைச்சுவை;


2030 ல் இந்தியா எப்படி இருக்கம்-பேஸ்புக்கு வந்த நகைச்சுவை;

நண்பர்கள் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா 2030 ல் எப்படி இருக்கும்னு ஓரு சில போட்டோஸ் அனுப்பியிருந்தாங்க அதுல நகைச்சுவையா இருக்குற ஒரு போட்டாவையும் கவலைப்படக்கூடிய ஓரு போட்டாவையும் உங்களோடு நான்  பகுந்துகிறேன்.


புதன், 15 ஆகஸ்ட், 2012

நீ தானே என் பொன்வசந்தம்-புது டீசர்


நீ தானே என் பொன்வசந்தம்-புது டீசர்

தயவு செய்து இந்த வீடியோவை பார்க்காதீர்கள் பார்த்தீர்கள் என்றால் திரும்ப திரும்ப நிறைய முறை பார்ப்பீர்கள்.அவ்வளவு அருமையான இசை ,அழகான வீடியோ.சமீப காலங்களில் இப்படிப்பட்ட பாடலை நான் கேட்டது இல்லை என்று செப்டம்பர் 1 வரும் அனைத்து பாடல்களையும் கேட்க.அன்று தான் இசை வெளியீடு.அதுவும் இப்பாடலின் ஆரம்ப இசை சொல்ல வார்ததை இல்லை கேட்டு பாருங்கள்.



பெரிய நடிகர்களின் பெரிய மொக்கை படங்கள்:


பெரிய நடிகர்களின் பெரிய மொக்கை படங்கள்:

நான் ரசிக்கும் இந்த நடிகர்களிடம் எனக்கும், பொதுவாக மக்களுக்கும் பிடிக்காத சில மொக்கை படங்கள் வரிசையை தந்துள்ளேன்.இன்று டிவியில் அஜித் நடித்த உன்னைக் கொடு என்னை தருவேன் என்ற பெரிய மொக்கை படத்தை கொஞ்சம் பார்த்த பாதிப்பு தான் இந்த பதிவு.

ரஜினிகாந்த்:

1.நாட்டுக்கு ஒரு நல்லவன்
2.கொடிபறக்குது
3.பாபா
4.வள்ளி
5.சிவப்பு சூரியன்
6.மாவீரன்
7.அதிசய பிறவி
8.விடுதலை

கமல்ஹாசன்.

1.ஆளவந்தான்
2.மகாநதி
3.இந்திரன் சந்திரன்
4.மகாராசன்
5.நம்மவர்
6.சிங்காரவேலன்
7.சூரசம்ஹாரம்
8.மும்பை எக்ஸ்பிரஸ்

விஜய்:

பூவே உனக்காக முன்னால் வந்த பல படங்கள் பெரிய மொக்கை தான்.அதனால் பூவே உனக்காக விற்கு பின்னால் வந்த படங்களில் மொக்கை படத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்
1.சுறா
2.வில்லு
3.ஆதி
4.உதயா
5.கண்ணுக்குள் நிலவு
6.நெஞ்சினிலே
7.என்றென்றும் காதல்
8.நிலாவே வா
9.காலமெல்லாம் காத்திருப்பேன்
10.செல்வா
11.மாண்புமிகு மாணவன்
12.வசந்த வாசல்

ஆஜித்குமார்;

1.பில்லா-2
2.ஆழ்வார்
3.கல்லுரி வாசல்
4.மைனர் மாப்பிள்ளை
5.பகைவன்
6.உன்னைக் கொடு என்னை தருவேன்
7.ஆஞ்சநேயா
8.ஜனா
9.ஏகன்
10.பரமசிவன்
11.அசல்

சூர்யா;

1.மாயாவி
2.பெரியண்ணா
3.சந்திப்போமா
4.ஆய்த எழுத்து
5.இரத்த சரித்திரம்
6.காதலே நிம்மதி



செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ரயில் பயணம்-அடையாள அட்டை கட்டாயம்


ரயில் பயணம்-அடையாள அட்டை கட்டாயம்

2 ம் வகுப்பு முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும் அனைவரும் அடையாள அட்டையுடன் பயணிக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ளது.ஏற்கனவே ஏசியில் பயணிப்பவர்களுக்கும் ,இ டிக்கெட் ,தக்கல் டிக்கெட்டிற்கு அடையாள அட்டை அவசியம் என்பது நடைமுறையில் உள்ளது.அடுத்த மாதம் முதல் முன்பதிவு செய்து பயணிக்கும் அனைவருக்கும் அடையாள அட்டை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் புதிய முறை நடைமுறைக்கு வந்தால் டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும்.புகைப்படத்துடன கூடிய ஓரிஜினல் அடையாள அட்டை பயணத்தின் பொழுது கொண்டு செல்ல வேண்டும்.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் எனில் யாரேனும் ஓருவர் அடையாள அட்டையை கொண்டு சென்றால் போதுமானது.

மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள்,.பள்ளி ,கல்லுரி அடையாள அட்டைகள், வங்கி பாஸ்புக் ,புகைப்படத்துடன் கூடிய ATM கார்ட்கள் ,டிரைவிங் லைசன்ஸ் ,மாதந்திர ரயில்வே பாஸ் அட்டை ஆகியவை அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அடுத்த முறை ரயிலில் பயணிக்கும் பொழுது அடையாள அட்டை எடுத்துட்டு போக மறக்காதீங்க.மறந்திங்கனா அபராதம் கட்டனும்.

விலைவாசி குறைந்துள்ளதாம்-அண்டப்புழுகு மத்திய அரசு


விலைவாசி குறைந்துள்ளதாம்-அண்டப்புழுகு மத்திய அரசு

இன்று ஜீலை மாத INFLATION ஜ மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.6.87 என்று அறிவித்துள்ளது அதாவது 2010 ஜனவரியில் இருந்த அதே அளவு தான் இப்பொழுது உள்ளதாம்.

இதே ஜீலை மாதத்தில் தான் சர்க்கரை விலை 30  ரூபாயில் இருந்து 40  ரூபாய்க்கு சென்றது.அரிசி விலை 25 கிலோ மூடை 900 ரூபாயில் இருந்து 1050 க்கு சென்றது.அனைத்து காய்கறி விலைகளும் 20 முதல் 30 சதவிதம் உயர்ந்துள்ளது.ஆனால் மத்திய அரசு கொடுத்த புள்ளி விபரம் விலைவாசி உயர்வு 6.87 சதவீதம் என்று.புள்ளி விபரங்களை சொல்லி வெளிநாட்டில் உள்ளவர்களை ஏமாற்றலாம் தினமும் விலைவாசி உயர்வை அனுபவிக்கும் மக்களை ஏமாற்ற முடியுமா?

இன்று இப் புள்ளி விபரங்கள் வெளியானதும் பங்குசந்தை நல்ல முன்னேற்றம் கண்டது.அனைத்து துறை வல்லுனர்களும் அரசை குறை தான் கூறுகின்றனர்.ஆனால் மாண்டேசிங் அலுவாலியா விலைவாசி குறைவை வரவேற்கிறேன் என்று பேட்டி தருகிறார்

பொய்யான புள்ளி விபரங்களை தருவதற்கு பதிலாக விலை வாசி குறைய வழியை தேடுங்கப்பா.நம்ம சிதம்பரம் நிதி அமைச்சர் ஆனாலே எல்லாமே அரசுக்கு சாதகமாக இருக்குனு நிறைய பொய் பொய்யா பேசுறாருங்க.

டெசோ மாநாடு-நானும் ரவடி ஜெயிலுக்கு போறேன்-சில கார்ட்டுன்கள்


டெசோ மாநாடு-நானும் ரவடி ஜெயிலுக்கு போறேன்-சில கார்ட்டுன்கள்

ஆட்சியில் இருக்கும் பொழுது ஈழதமிழர்களை பற்றி நினைக்கவில்லை இன்று மட்டும் எங்கே வந்தது திடீர் பாசம் மக்களை ஏமாற்றவா நான் தமிழனுக்காக போராடுகின்றேன் என்று.கருணாநிதி அவர்களே தமிழை வைத்து இனி மக்களை ஏமாற்ற முடியாது.


ஈழப்போர் மிகத் தீவிரமாக நடந்துக் கொண்டு இருக்கும் பொழுது எங்கே போனீர்கள்.அன்று சொல்ல வேண்டியது தானே போரை நிறுத்தி அமைதி ஏற்பட இந்தியா வழி ஏற்படுத்த வேண்டும் என்று அவ்வாறு இந்தியா அரசாங்கம் செயல்படவில்லை எனில் மத்திய அரசாங்கத்துக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கூறியிருக்காலமே செய்தீர்களா இல்லை முதல்வர் பதவியை ராஜினாமா செய்து இருக்காலமே எதுவும் செய்யாமல் இன்று மட்டும் ஏன் தமிழர்கள் மேல் தனி பாசம் காட்டுகிறீர்கள்.தமிழன் பெயரை சொல்லி கேவலமான அரசியல் செய்கீறீர்களா?


உங்களால் ஈழம் என்ற வார்த்தையை கூட உபயோகப்படுத்த முடியவில்லை இன்னும் எதற்கு மத்திய அரசில் கூட்டணி குடும்ப உறுப்பினர்களை காப்பாத்தவா.தமிழ் மக்களுக்கு கனிமொழியும் ,தயாநிதிமாறனும் என்ன செய்துவிட்டார்கள் அவர்களுக்கு எதுக்கு டெசோ மேடையில் இடம்.தமிழன் விடுதலைக்கு போராடிய எத்தனை பேரை உங்களால் விழாவுக்கு அழைக்க முடிந்தது.உண்மையாக தமிழ்மக்கள் நலனுக்காக போராடிய ஒருவர் கூட இம் மாநாட்டிற்கு வரவில்லை.வந்த அனைவரும் உங்களால் பலன் அடைந்தவர்களும் கட்சி தொண்டர்கள் தான்.

நீதிமன்றம் தலையிட்டதால் பொதுமக்கள் எவ்வித இடையிறு இல்லாமல் தப்பித்தோம்.நிறைய கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்த படியால் உங்களாலும் கட்சி தொண்டர்களை கூட்டி மாநாட்டிற்கு கடலளவு கூட்டம் வந்தது என்ற தோற்றத்தை உருவாக்க முடியவில்லை.இம் மாநாட்டால் தாங்கள் என்ன சாதித்து விட்டிர்கள்.3 நாட்கள் தொலைக்காட்சிகளுக்கும் ,நாளிதழ்களுக்கும் செய்தி அளித்துள்ளீர்கள்.தமிழனுக்கு இதனால் என்ன லாபம்.



எல்லாம் முடிந்த பிறகு வடிவேலு பாணியில் மாநாடு வெற்றி வெற்றி என்று நீங்கள் கூறிக் கொள்கிறீர்கள்.ஒருவரும் உங்களை நம்ப தயாராக இல்லை.இன்று நீங்கள் பதவிக்காகவும் உங்கள் குடும்ப உறுப்பினர்களை வழக்கில் இருந்து காக்க தான் போரடி கொண்டுள்ளீர்களே தவிர்த்து தமிழ் மக்களுக்காக இல்லை.

உலகநாயகன் கமல்-சில அவலங்கள்


உலகநாயகன் கமல்-சில அவலங்கள்

கமல் சிறந்த நடிகர் என்பதை யாரும் மறுக்கவில்லை.நானும் அவரது நடிப்பை என்றும் ரசிக்கின்றேன்.அனைத்து நடிகர்களும் பணம்,புகழ் சம்பாதிக்க தான் நடிக்க வருகின்றனர்.ஆனால் ஒரு சில நடிகர்களிடம் தான் மனிதாபிமானம் உள்ளது.அது கமலிடம் உள்ளதா என்றால் எனக்கு தெரிந்தவரை கிடையாது என்பேன்.

கமல் பிராமின் பிரிவை சேர்ந்தவர்.அவர் திரை உலகில் வளரும் காலங்களில் திராவிட கட்சிகள் ஆதிக்காமாக இருந்ததாலும் பிராமின் பிரிவு என்றால் எங்கே நம்மால் மேலே செல்ல முடியாதோ(எ.கா மெஜினிகணேசன்)என்ற காரணத்தினால் தான் இன்று வரை கடவுள் எதிர்ப்பு கொள்கை உள்ளவராக தன்னை வெளிஉலகிற்கு காட்டிக்கொண்டுள்ளார்.

2 மனைவிகள் இருவரையும் விட்டு பிரிந்து உள்ளார்.கௌதமியுடன் வாழ்ந்து வருகிறார்.கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல்;.இதை நிருபர்கள் கேட்டதற்கு என் வீட்டிற்குள் எட்டி பார்க்காதீர்கள் என்று வெளிப்படையாக சொன்னவர்.

வாணியுடன் கமல்

சரிகாவுடன் கமல்:

கௌதமியுடன் கமல்:



தான் பெரிய நடிகர் ஆகும் வரை ரசிகர் மன்றங்களை ஆதரித்தவர் அதன் பிறகு ரசிகர் மன்றங்கள் எனக்கு வேண்டாம் என்றும் விருப்பம் இருந்தால் அவற்றை நற்பணி மன்றம் ஆக்கிவிடும் படி அறிவத்தவர்.இவ் அறிவிப்பை அவரது ஆரம்ப காலத்தில் அறிவிக்காதது ஏன்?

பட்ஜெட் குறைவான திரைப்படங்கள் அல்லது நல்ல கதையுள்ள படங்கள் என்றால் அவரது சொந்த தயாரிப்பாகவே வரும்.1995 க்கு பிறகு இவர் நடித்த திரைப்படங்களால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை(வசூல்ராஜா தசாவதாரம் தவிர்த்து).ஆளவந்தான் படத்தை தாணு தயாரித்தார் அவற்றில் ஏற்பட்ட நஷ்டம் பற்றி வெளிப்படையாகவே அறிவித்தார்.கமல் தன்னை உலகம் போற்றும் நடிகராக மாற தான் போராடுகிறாரே தவிர்த்து தன்னை வைத்து படம் பண்னும் தயாரிப்பாளருக்கு லாபம் தர வேண்டும் என்பது அவரது எண்ணம் இல்லை.

கமலை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மீண்டும் அவரை வைத்து படம் எடுக்க தயங்குகின்றனர்.தான் பெரிய மேதை என்று வெளி உலகிற்கு காட்ட மிகவும் போரடுகிறார்.இவரது படங்கள் வெளிவரும் காலங்களில் அனைத்து சினிமா நிகழ்ச்சியிலும் தவறாமல் கலந்து கொள்வார்.படம் வெளிவரும் காலத்தில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு தொகை அளிப்பார்.அரசால் அவரது படத்திற்கு பாதிப்பு வர கூடாது என்று.

கமல் என்றும் ஆளும்கட்சிக்கு மிக செல்ல பிள்ளையாக நடிக்கவே ஆசைப்படுவார்.அதிலும் விருமான்டி படத்திற்கு வந்த எதிர்ப்புக்கு பிறகு ஆளும்கட்சிகளுக்கு ஆட்சியில் உள்ளவரை  அனுசரித்து போவதே அவரது கொள்கை.அவரது ராஜ்கமல் பேனரில் வந்த திரைப்படங்கள் அனைத்தும் ஆளும்கட்சி தொலைக்காட்சிக்கு மட்டுமே தருவார்.கலைஞர் ஜெயா டிவிக்கு படங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.

தமிழக மக்கள் இல்லை என்றால் கமலால் இவ்வளவு பணத்தையும் புகழையும் சம்பாதித்து இருக்க முடியுமா?.தமிழக மக்களுக்கு வேண்டாம் ஏழைகளுக்கு ஏதேனும் சிறு உதவியாவது இவர் செய்தது உண்டா?.அனைத்து நடிகர்களும் இப்படி தான்.

பின்குறிப்பு:கமலின் நடிப்பை நான் குறை சொல்லவில்லை அவரது குணங்களை தான் நான் கூறியுள்ளேன்

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

மாற்றான்-இசை விமர்ச்சனம்


மாற்றான்-இசை விமர்ச்சனம்

ஹரிஸ்ஜெயராஜ், சூர்யா,கே.வி.ஆனந்த் மீண்டும் கூட்டனியில் வரும் படம் மாற்றான்.இதன் ஆடியோ சிங்கப்பூரில் வெளியிட்டுள்ளார்கள்.படத்தை பார்க்றது ,கட்அவுட் வைக்றது எல்லாம் அப்பாவி தமிழன்கள் ஆனால் ஆடியோ வெளியீடு வெளிநாட்டில்.வாழ்க தமிழ்.


இசை விமர்ச்சனம்:

1.ரெட்டைக் கதிரே- அறிமுக பாடல் போல.வழக்கமான ஹரிஸ் இசை.பல பாடல்களில் கேட்ட இசை தான்.சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.

2.நானி கோனி : நல்ல மெலடி பாடல்.கேட்க நன்றாக உள்ளது.அயன் பாடல் பாதிப்பு வருவதை தவிர்க்க இயலவில்லை.நல்ல பாடல்

3.தீயே தீயே: நல்ல பாடல்.இசை நன்றாக உள்ளது.வழக்கான ஹரிஸ் இசை.புதிதாக ஒன்றும் இல்லை.

4.யாரோ யாரோ:7ம் அறிவில் வரும் யம்மா யம்மா பாடலை வார்த்தைகளை மாற்றி கேட்பது போல் உள்ளது.

5.கால் முளைத்த பூவே:பாடலின் தொடக்கம் மிக நன்றாக உள்ளது.மதன் கார்க்கின் வரிகள் நன்றாக உள்ளது.பழைய பாடல்கள் கம்மிங் நடுவில் வருவது ரசிக்கும் படியாக உள்ளது..

நானி கோனி பாடல் மிக நன்றாக உள்ளது.தீயே தீயே, கால் முளைத்த பூவே பாடல்கள் ரசிக்கும் படியாக உள்ளது

மாற்றான் இசை எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லை.ஒரே மாதிரியான இசை ஹரிஸ் எப்ப வசீகரா, உயிரின் உயிரே மாதிரி தரப்போறீங்க.


வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

வரவேற்போம் தன்னம்பிக்கை சிங்கம் யுவராஜ்சிங்கை


வரவேற்போம் தன்னம்பிக்கை சிங்கம் யுவராஜ்சிங்கை

யுவராஜ்சிங் 2011 உலககோப்பையின் தொடர்நாயகன்.ஆல்ரவுன்டர் பல சூழ்ச்சிகளிலும் தனது திறமையால் இந்திய அணியில் தொடர்ந்து இடம் பெற்றவர்.2011 ம் ஆண்டு நவம்பரில் வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான டெஸட் போட்டிக்கு பிறகு அவர் எப்போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை காரணம் புற்றுநோய்.

சிகிச்சையின் பொழுது



சிகிச்சைக்கு பிறகு பயிற்சியின் பொழுது



புற்றுநோயால் மிக கொடியமுறையில் பாதிக்கப்பட்டு அவரது தன்னம்பிக்கையாலும் ,கடவுளின் அருளாலும், ரசிகர்களின் பிரார்த்தனையாலும் புற்றுநோயை வென்று மே மாதம் இந்தியா திரும்பினார்.புற்றுநோயின் பாதிப்பை எண்ணி வருத்தப்படாமல் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டார்.


6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அற்புத காட்சி



இன்று அறிவிக்கப்பட்ட 20 ஓவர் உலககோப்பைக்கான  இந்தியா அணியில் யுவராஜ்சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இது அவரது தன்னம்பிக்கைக்கு கிடைத்த மாபெரும் பரிசு.நம் சகோதரனை மனமார வரவேற்போம், மாபெரும் சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்.

ஈமு வெடித்தது-ஓரு பாளோஅப்


ஈமு வெடித்தது-ஓரு  பாளோஅப்

நான் ஈமு பதிவு போட்ட நேரமோ என்னமோ தமிழ்நாட்டின் பெரிய ஈமு பண்ணை என்று அறிவித்துக் கொண்ட சுசி ஈமு பார்ம்ஸ் நிர்வாகத்தினர் ஒட்டம் பிடித்துள்ளனர்.பல நிறுவனங்களும் ஒட்டம் பிடித்துள்ளன.
வழக்கம் போல் ஏமாந்த மக்கள் நிறுவனத்தின் முன் கூடி பணத்தை திரும்ப தரக்கோரி கோஷம் போட்டுள்ளனர்.அத்துடன் காவல்துறையும் வழக்கு பதியப்பட்டு சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் கொடுத்து ஏமாத்திக்கொண்டு இருந்த பொழுது கண்டுக்காத அரசு இப்பொழுது சொத்து விபரங்களை சேமித்து நடவடிக்கை எடுக்க போகிறதாம்.சொத்து விபரத்தை சேகரித்து பாசி நிறுவனத்தில் கோடிக்கணக்கில் கமிஷன் வாங்கியது போல் ஈமுவிலும் காவல்துறை அதிகாரிகள் வாங்கப்போகின்றார்களோ என்னமோ?

தவறுகள் நடப்பதற்கு முன்னால் அதை தடுப்பதற்கு தான் அரசும் காவல்துறையும்.ஆனால் நம் அரசும் காவல்துறையும் தவறு நடந்த பிறகு தான் யோசிக்கவே செய்கின்றனர்.உயிரோடு இருக்கும் பொழுது கவனிக்காமல் இறந்த பிறகு போஸ்ட் மார்டம் செய்து எதனால் இறந்தார் என அறிக்கை தருவது போல் தான் உள்ளது அரசு செயல்.

இந்த விளம்பரத்தில் நடித்து மக்களை ஏமாற்ற துணை போன நடிகர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்.அதுவும் சட்டமன்ற உறுப்பினர் சரத்குமாரின் பதில் என்ன?.பணம் கொடுத்தால் எதில் வேண்டும் என்றாலும் நடிப்பார்களோ?

விதவிதமாக யோசித்து ஏமாற்ற நினைப்பவர்கள் ஒரு பக்கம் அதை நம்பி கஷ்டப்பட்ட பணத்தை ஏமாறும் மக்கள் ஓரு பக்கம்.என்று தான் திருந்துவார்கள் இவர்கள்?

தினமலரில் வந்த செய்தி இது: