உலகநாயகன் கமல்-சில அவலங்கள்
கமல் சிறந்த நடிகர் என்பதை யாரும் மறுக்கவில்லை.நானும் அவரது நடிப்பை என்றும் ரசிக்கின்றேன்.அனைத்து நடிகர்களும் பணம்,புகழ் சம்பாதிக்க தான் நடிக்க வருகின்றனர்.ஆனால் ஒரு சில நடிகர்களிடம் தான் மனிதாபிமானம் உள்ளது.அது கமலிடம் உள்ளதா என்றால் எனக்கு தெரிந்தவரை கிடையாது என்பேன்.
கமல் பிராமின் பிரிவை சேர்ந்தவர்.அவர் திரை உலகில் வளரும் காலங்களில் திராவிட கட்சிகள் ஆதிக்காமாக இருந்ததாலும் பிராமின் பிரிவு என்றால் எங்கே நம்மால் மேலே செல்ல முடியாதோ(எ.கா மெஜினிகணேசன்)என்ற காரணத்தினால் தான் இன்று வரை கடவுள் எதிர்ப்பு கொள்கை உள்ளவராக தன்னை வெளிஉலகிற்கு காட்டிக்கொண்டுள்ளார்.
2 மனைவிகள் இருவரையும் விட்டு பிரிந்து உள்ளார்.கௌதமியுடன் வாழ்ந்து வருகிறார்.கல்யாணம் பண்ணிக் கொள்ளாமல்;.இதை நிருபர்கள் கேட்டதற்கு என் வீட்டிற்குள் எட்டி பார்க்காதீர்கள் என்று வெளிப்படையாக சொன்னவர்.
வாணியுடன் கமல்
சரிகாவுடன் கமல்:
கௌதமியுடன் கமல்:
தான் பெரிய நடிகர் ஆகும் வரை ரசிகர் மன்றங்களை ஆதரித்தவர் அதன் பிறகு ரசிகர் மன்றங்கள் எனக்கு வேண்டாம் என்றும் விருப்பம் இருந்தால் அவற்றை நற்பணி மன்றம் ஆக்கிவிடும் படி அறிவத்தவர்.இவ் அறிவிப்பை அவரது ஆரம்ப காலத்தில் அறிவிக்காதது ஏன்?
பட்ஜெட் குறைவான திரைப்படங்கள் அல்லது நல்ல கதையுள்ள படங்கள் என்றால் அவரது சொந்த தயாரிப்பாகவே வரும்.1995 க்கு பிறகு இவர் நடித்த திரைப்படங்களால் தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை(வசூல்ராஜா தசாவதாரம் தவிர்த்து).ஆளவந்தான் படத்தை தாணு தயாரித்தார் அவற்றில் ஏற்பட்ட நஷ்டம் பற்றி வெளிப்படையாகவே அறிவித்தார்.கமல் தன்னை உலகம் போற்றும் நடிகராக மாற தான் போராடுகிறாரே தவிர்த்து தன்னை வைத்து படம் பண்னும் தயாரிப்பாளருக்கு லாபம் தர வேண்டும் என்பது அவரது எண்ணம் இல்லை.
கமலை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மீண்டும் அவரை வைத்து படம் எடுக்க தயங்குகின்றனர்.தான் பெரிய மேதை என்று வெளி உலகிற்கு காட்ட மிகவும் போரடுகிறார்.இவரது படங்கள் வெளிவரும் காலங்களில் அனைத்து சினிமா நிகழ்ச்சியிலும் தவறாமல் கலந்து கொள்வார்.படம் வெளிவரும் காலத்தில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு தொகை அளிப்பார்.அரசால் அவரது படத்திற்கு பாதிப்பு வர கூடாது என்று.
கமல் என்றும் ஆளும்கட்சிக்கு மிக செல்ல பிள்ளையாக நடிக்கவே ஆசைப்படுவார்.அதிலும் விருமான்டி படத்திற்கு வந்த எதிர்ப்புக்கு பிறகு ஆளும்கட்சிகளுக்கு ஆட்சியில் உள்ளவரை அனுசரித்து போவதே அவரது கொள்கை.அவரது ராஜ்கமல் பேனரில் வந்த திரைப்படங்கள் அனைத்தும் ஆளும்கட்சி தொலைக்காட்சிக்கு மட்டுமே தருவார்.கலைஞர் ஜெயா டிவிக்கு படங்கள் மாறிக்கொண்டே இருக்கும்.
தமிழக மக்கள் இல்லை என்றால் கமலால் இவ்வளவு பணத்தையும் புகழையும் சம்பாதித்து இருக்க முடியுமா?.தமிழக மக்களுக்கு வேண்டாம் ஏழைகளுக்கு ஏதேனும் சிறு உதவியாவது இவர் செய்தது உண்டா?.அனைத்து நடிகர்களும் இப்படி தான்.
பின்குறிப்பு:கமலின் நடிப்பை நான் குறை சொல்லவில்லை அவரது குணங்களை தான் நான் கூறியுள்ளேன்