ஞாயிறு, 22 ஜூலை, 2012

இதுவும் கடந்து போகும்


இதுவும் கடந்து போகும்


இதுவும் கடந்து போகும் இவ்வார்த்தை பகவத்கீதையில் அர்ஜீனனுக்கு பகாவான் கண்ணன் சொன்னது.


எவ்வளவு அழகான உணர்வுபூர்வமான வார்த்தை.இதன் தத்துவத்தை புரிந்து கொண்டால் வாழ்க்கை தத்துவமே விளங்கி விடும்.இன்பம் துன்பம் அனைத்தும் சமமாக தெரியும்.


இன்று நாம் சந்தோசம் என்று நினைக்கும் ஒரு விசயம் வருத்தமான செய்தி வந்ததும் சந்தோசததை மறந்து கவலை பட ஆரம்பித்து விடுகிறோம்.அதே போல் வருத்தமான நேரத்தில் சந்தோச செய்தி வந்தவுடன் வருத்தத்தை மறந்து சந்தோச பட ஆரம்பித்து விடுகிறோம்.


மகிழ்ச்சியோ வருத்தமோ எதுவும் நிரந்தரம் இல்லை எல்லாம் கடந்து போகும்.அதனால் தான் இந்து சமுதாயத்தில் ஒருவர் இறந்து விட்டால் காரியம் முடிந்ததும் சம்பந்தி விருந்து வைத்து இறந்தவரின் குடும்பத்தை சந்தோசபாதைக்கு திசை திருப்புகின்றனர்.


இன்றைய இளைஞர்கள் இத்தத்துவத்தை மிக அழகாக புரிந்து உள்ளனர் அதனால் தான் ஓரு பெண் அவனது காதலை நிராகரித்தால் உடனே அடுத்த பெண்ணை தேடி  போகின்றனர் எவ்வித வருத்தமும் இல்லாமல்.


இன்று நாம் பெரிய பிரச்சினை என்று நினைக்கும் ஒரு விசயம் அதை காட்டிலும் பெரிய பிரச்சினை வந்ததும் பழையதை மறந்து புது பிரச்சினை பெரியது என்று  பழைய விசயங்களை மறந்து விடுகிறோம்.இது தான் வாழ்க்கை அனைத்தும் கடந்து போகும்


இறந்தவர்களுடன் சுடுகாட்டுக்கு செல்லும் பொழுது நாமும் ஒரு நாள் இங்கே வரவேண்டியவர்கள் தான் என நினைத்தாலே சண்டை சச்சரவு இல்லாமல் வாழலாம்.

இதுவும் கடந்து போகும்.



3 கருத்துகள்:

  1. "இன்றைய இளைஞர்கள் இத்தத்துவத்தை மிக அழகாக புரிந்து உள்ளனர் அதனால் தான் ஓரு பெண் அவனது காதலை நிராகரித்தால் உடனே அடுத்த பெண்ணை தேடி போகின்றனர் எவ்வித வருத்தமும் இல்லாமல்."

    Ithu ingei migaum thavarana oru utharanam. Orumurai thotravan marumurai muyarchi seivathu thavarillai. Aanaal orumurai patta pinpum marumurai pada thayaravathu thevaiyatrathu. Avan athil sariyana paadathai katru vaalkaiku thevaiyana nalla pala muyarchigalai edukkavillai enpathuthaan ennudaiya ennam.
    Aathalaal Kadhalai naan thavarupaduthavillai. (Unmaiyana) Athai mathippavan naan. Kaathalilum athai vida melaga Annai Thanthaiyin Paasathilumei unmaiyana anpai paarkkamudiyum.
    Aanal athuyum poiyentru (Maayai)therinthapin (thotrapin) meendum athilei matroruvalidathil poi viluvathu anupavathin palan illaiyei! Athargaga Thotravargal veru pennai namba veandam entru arthamillai. Nam annaiyum oru pen thaanei; enathu thanthai avargalai muluvathumaagathanei nambinaar.
    Aanaal namatentru varumvarai kathirunthu athuvarai nam vaalvirgai muyarchigal pala seiyalamei?! Avalinum munthaiya, nammai thavira prithontrum karuthaatha nam petrorai kavanikkalamei.

    பதிலளிநீக்கு
  2. சரியான கருத்து செந்தில்

    பதிலளிநீக்கு