நீ தானே என் பொன்வசந்தம் -இசை விமர்ச்சனம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல பாடல்களை கேட்ட திருப்தியை எனக்கு நீ தானே என் பொன்வசந்தம் இசை அளித்தது.அனைத்து பாடல்களும் கேட்க மிக நன்றாக உள்ளது.பிடிக்கலை மாமு என்ற பாடலை தவிர்த்து ஆனாலும் இப்பாடலின் ஆரம்ப இசை மிக நன்றாக உள்ளது.
1.காற்றை கொஞ்சம்:
மிக அருமையான கம்மிங்கோட ஆரம்பிக்கும் பாடல் கார்த்தி மிக ரசித்து பாடியுள்ளார்.பாடல் வரிகள் கேட்கும் படியாக அருமையான இசை.மனதை விட்டு மாறாத பாடல்.அருமையான வரிகள்.இடையில் வரும் பெண்குரல் கம்மிங் மிகவும் அருமை.
2.முதல் முறை:
மிக அருமையான பெண்குரல்.பாடியவர் சுனிதி சவுகான்.அருமையான வயலின் இசை.மிக நல்ல வேகமான இசையுடன் குரல் ஒலிப்பது மிக அருமை.
3.சாய்ந்து சாய்ந்து:
யுவனின் அருமையான குரலோடு ஆரம்பிக்கும் அருமையான பாடல்.வார்த்தைகளை மிக தெளிவாக கேட்கும் படியான அமைதியான இசை.பாடல் வரிகள் மிக அருமை
4.சற்று முன்பு:
மிக அருமையான குரலுக்கு சொந்தக்காரர் NSK அவர்களின் பேத்தி ரம்யா.மிக அருமையான பாடல்.கதாநாயகியின் ஏக்கத்தை மிக அருமையாக பாடல் வெளிப்படுத்துகிறது.எனக்கு மிக பிடித்த பாடல்.ஆர்பரிக்காத அமைதியான இசை.
5.என்னோடு வா:
அருமையான இசையால் ஆரம்பிக்கும் பாடல் கார்த்தியின் அருமையான குரல் பாடலின் தரத்தை மேலும் சுவையுள்ளதாக்கி உள்ளது.அருமையான காதல் வரிகள்.மெல்லிய இசை.
6.வானம் மெல்ல.
இளையராஜாவின் குரலில் ஒலிக்கும் பாடல்மிக அருமையான வயலின் இசையுடன் ஆரம்பிக்கும் பாடல்.இளையராஜாவை தவிர்த்து வேறு ஒருவர் பாடியிருந்தால் இன்னும் அருமையாக இருந்து இருக்கும்.கேட்கும் படியான பாடல்.இசை அருமை.
7.பெண்கள் என்றால்.
யுவன் பாடியுள்ள பாடல்.மிக அருமையான இசை.வித்தியசமான இசை காதல் தோல்வி பாடலை வித்தியசமாக அளித்துள்ளனர்.
8.பிடிக்கலை மாமு:
இந்த ஆல்பத்தில் எனக்கு பிடிக்காத பாடல்.ஆனாலும் இசை நன்றாக உள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல பாடல்களை கேட்ட திருப்தியை இப்படம் அளித்துள்ளது.நீங்களும் கேளுங்கள்.உங்களுக்கும் பிடிக்கும்
நெசமா சொல்லுங்க. புடிச்சுருக்காக்கும்
பதிலளிநீக்குvery excellent melody in the year Raja sir musical very fantastic
பதிலளிநீக்குvery excellent melody in the year Raja sir musical very fantastic
பதிலளிநீக்கு